பாலைவன பரங்கியன்

அரசியல்வாதிகள் குறித்த விமர்சனங்களுக்கான வலைப்பூ

Friday, April 28, 2006

வந்துட்டாரய்யா வந்துட்டாரு….

ஆறு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாகியிருந்த “கராத்தே தியாகராஜன்”,புகழ் பெற்ற முன்னாள் மேயர் சர்.பி.டி.தியாகராஜன் பிறந்த நாளில் மீண்டும் மாநகராட்சிக்கு வந்தார். காங்கிரஸில் ஐக்கியமாகி விட்ட இவரை மேள,தாளத்துடன் வரவேற்றார்களாம் காங்கிரஸ்காரர்கள். சினிமா பாணியில், மொபைலில் பேட்டிக் கொடுத்துக்கொண்டிருந்த கராத்தே, தேர்தல் நெருங்கி விட்ட வேளையில் மீண்டும் ஆஜராகி விட்டார்.

காங்கிரஸிலிருந்து, அ.தி.மு.க-விற்கு தாவிய வேகத்திலேயே பதவியையும் அடைந்த கராத்தே, அதே வேகத்தில் வழுக்கினார். சமீப காலத்தில் அ.தி.மு.க-வில் இருந்துக்கொண்டே ஜெயலலிதாவுக்கு அதிக ‘குடைச்சல்’ கொடுத்தவர் இவர் மட்டுமே. அதனால் தான் ஜெயாவும் இவரை ஓட, ஓட விரட்டினார்.

தலை மறைவான காலங்களில் போலிஸ்க்கு பயந்து தனது தாயாரின் இறப்பிற்கு கூட வராத இந்தப் “புண்ணியவான்” இப்போது வந்து துணை மேயராக தொடர்ந்து மக்களுக்கு பணி(?) செய்வேன் என்கிறார். இப்படி அரசியல் “கராத்தே” போட்டு இவர்கள் சாதிக்க நினைப்பதுதான் என்ன???