பாலைவன பரங்கியன்

அரசியல்வாதிகள் குறித்த விமர்சனங்களுக்கான வலைப்பூ

Tuesday, February 07, 2006

முதல் சிந்தனை…

ஒரு நாட்டின் மொத்த மக்கள் பிரதிநிதிகளில் ஆறில் ஒருவருக்கு நீண்ட கிரிமினல் ரெக்கார்டு உண்டு.எங்கேன்னு கேட்கறீங்களா? நம்ம இந்தியாலதான்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தற்போதைய 542 மக்களவை உறுப்பினர்களில் 98 பேர் எல்லாக் குற்ற பின்புலமும், இருந்து எம்.பி -யாக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் முன்னணியில் இருப்பது பெரிய மாநிலமான உ.பி தான்.மொத்தமுள்ள 80 எம்.பி- யில் 20 பேருக்கு இந்த தகுதி(????)உண்டு. (இதிலயும் நாங்கதா பெறிய்ய்ய ஆளூன்னு காட்டுறாங்க) இதை விட முக்கியமாக கவனிக்க வேண்டியது கேபினட் அமைச்சர்களிலேயே ஐந்தில்,ஒரு பங்கினர் கிரிமினல் ரெக்கார்டு உள்ளவர்கள் என எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்படுகின்றனர்.(திருடனுக்குதான் திருடனப்பத்தி தெரியும்)

இன்னொரு பக்கம் அரசியலை குடும்பத் தொழிலாக்கி, "ஸ்டேடு மவனுக்கு,சென்டரலு மருமவனுக்கு"(குடும்பச்சொத்தையும் பிரிச்சாச்சு அது வேற விஷயம்) என பாகப்பிரிவினை செய்யும் கருணாநிதி போன்ற மூத்த(?) அரசியல்வாதிகள். கடந்த மக்களவை தேர்தலில் மட்டும் 240 அரசியல் குடும்பங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 2004 தேர்தலுக்கு முன்பு "உடன்பிறப்புக்களாலேயே" யாரென்று அறியப்படாத 'தயாநிதி மாறன்' இன்று 'பில் கேட்ஸ்'-டன் கைகுலுக்குவது இது போல கொல்லைப்புறமாக வந்துதான்.இது போல எல்லா மாநிலத்திலும் நிறையவே உண்டு.
ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போது கொள்கைகளை கொளுத்தி விட்டு பதவியை குறி வைத்து நிறம்(அணி)மாறும் பச்சோந்திகள் நிறைந்தது நம் நாடு.வரும் சட்டமன்ற தேர்தலில் திருவாளர்.'மரம் வெட்டி'இராமதாசு எந்தப்பக்கம் தாவுவார் என்று கருத்துக் கணிப்பு நடத்தினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. மத்தியில் தோழமை,மாநிலத்தில் எதிர்க்கட்சி என "கம்யூனிஸ்டு நாடகங்கள்"நடக்கின்றன.
அரசியல் பிழைப்பு இப்படியிருக்க,முதல் குடிமகன்,ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களோ 2020-ல் இந்தியா வல்லரசு,பேரரசு என "சின்னப்புள்ளத்தனமா"கனவு காண சொல்கிறார்.மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான உருப்படியான திட்டங்கள் ஒன்றும் இல்லை.ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டிலும்,மக்கள் நலத்திட்ட மானியங்கள் என்ற பெயரில் 1,15,000 கோடிக்கும் மேல் ஒதுக்கப்படுகிறது.இதில் ஒரு ரூபாயில் பதினைந்து பைசாவிற்கும் குறைவாகவே மக்களை சென்றடைகிறது.இவ்வாறு வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்களின் தரம் உயராமல்,அவர்களின் எண்ணிக்கை தான் உயருகிறது.
கேள்வி கேட்பதற்கே (வாய தொறக்கவே)காசு கேட்ட மக்கள் பிரதிநிதிகள் இங்குதான் இருக்கிறார்கள்.குழந்தை பிறக்கும்போது, மருத்துவமனை ஆயாக்களில் ஆரம்ப்பித்து,மரணித்து செல்லும் சுடுகாட்டு வெட்டியான் வரை அனைத்து தேவைகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இயற்கை சீரழிவுகளுக்கான நிவாரண நிதிகளை கூட சுருட்டும் அதிகாரமிக்க(???) சில அதிகாரிகளும்,அவற்றில் பங்கு கேட்ட அரசியவாதிகளும் இங்குண்டு.

ஆக இவர்களை ‘களை’ எடுக்க கடுமையான தண்டனைச் சட்டங்கள் வேண்டும். அவை மக்களின் வேதனையை வெளிப்படுத்தக்கூடியதாக அமைந்தாக வேண்டும்,அதற்கு இந்த அரசியல்வாதிகளாலேயே இயற்றப்பட்ட சட்டங்களை குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு, தெளிவான வழிக்காட்டுதல் அடங்கிய இறைச்சட்டங்களை பின்பற்ற முன் வர வேண்டும்.அப்படி பின்பற்றுவோமேயானால் இந்தியா மட்டுமல்ல உலகமே இன்புற்று விளங்கும். சிந்தியுங்கள்.......

6 Comments:

At 5:30 PM, Blogger Abu Umar said...

Welcome to Tamilblogs family.

 
At 4:49 AM, Blogger மாயவரத்தான் said...

About ur blog in today's dinamalar...

http://www.dinamalar.com/2006Mar01/flash.asp

In thenkoodu webportal...

http://www.thenkoodu.com

 
At 1:32 PM, Blogger பரங்கியன் said...

சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி மாயவரத்தான் அவர்களே!

 
At 1:49 PM, Blogger சுட்டுவிரல் said...

Congrats Mr.Parangian.
Keep it up your good writing.

 
At 8:09 PM, Blogger பரங்கியன் said...

thanks for wishing to suttuviral

 
At 9:11 PM, Blogger தமிழ் தாசன் said...

உங்கள் பதிவுகள், சாட்டை அடி போஇ இருக்கும் பலருக்கு.

வாழ்த்துக்கள்

 

Post a Comment

<< Home