ஆசியப் பயணத்தின் முக்கிய பகுதியாக அமெரிக்காவின் தாதா, மனித சமூக விரோதி, பிணம் தின்னிக் கழுகு "புஷ்" இந்தியா வந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. பல்வேறு நாட்டின் அரசியல் தலைவர்கள் நம் நாட்டிற்கு வருவதும், நம் நாட்டின் அரசியல் தலைவர்கள் பல்வேறு நாட்டிற்கு போவதும் சகஜம்தான். ஆனால் யாரை வரவைப்பது யாருடன் நட்பு கொள்வது என்பதுதான் முக்கியமானது. ஏனெனில் இந்தியாவிற்கென்று தனி மதிப்பு உலக அரங்கில் உண்டு.
வந்தது ஏன்? ஆசியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் உச்சியில் இருப்பது சீனா ஆகும். இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் இதன் வளர்ச்சி எங்கோ சென்றுவிடும். சீனாவின் பொருள்கள் ஏற்றுமதி செய்யாத எந்த நாடும் இல்லை என்று கூறுமளவுக்கு அந்த நாட்டின் பொருள்கள் உலக நாடுகள் அனைத்திலும் வியாபித்துள்ளன. இது அமெரிக்காவிற்குத் தலை வலியாகவே இருந்து வருகின்றது. உலக நாடுகளின் நாட்டாமை நான் தான் என கூறிக்கொண்டு இருக்கும் பொழுது இன்னொரு நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்து வருவதை இந்த இழிமதி கொண்டவர்களால் எப்படி சகிக்க முடியும். அதற்குத்தான் இந்த குள்ள நரிகளின் இந்தியா வருகை.
சமீபத்தில் அதாவது ஆப்கான் யுத்தம் நடக்கும் பொழுது அமெரிக்கா சீனாவின் மிலிடரிக்கு இரண்டு போர் விமானம் கொடுத்தது. அதில் மைக்ரோ போன்களை மறைத்து வைத்து கொடுத்தது. மிலிட்டரி கமாண்டர்கள் என்ன பேசுகின்றனர் என ஒட்டு கேட்பதற்காக. இதைக் கண்டுபிடித்துவிட்ட சீனா அரசாங்கம் அந்த இரண்டு விமானத்தையும் எரித்துவிட்டது.
சீனாவை நேரடியாக சீண்டாமல் முதுகில் குத்த தயாராகி விட்டது இந்த காட்டேறி. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட களம் தான் இந்தியா. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு, அணு சக்தி தொழில் நுட்பத்தை அமெரிக்காவிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு அனுமதி அளித்ததிலிருந்தே எவ்வளவு பெரிய “பயங்கர சதித்திட்டம்” அரங்கேற உள்ளது என்று புரிந்துக் கொள்ளலாம்.
இதைப் பற்றிய அறிவில்லாமல் நச்சுப்பாம்பு புஷ்-ன் வருகையை தலையில் வைத்து ஆடுகிறார்கள் இந்திய ஆளும் வர்க்கத்தினர். ஏற்கெனவே ஈரான்,ஈராக் போரில் சதாம் உசேனை வளர்த்து விட்ட அமெரிக்கா,அவர்களுக்கு எதிராக மத்திய ஆசியாவில் ஒரு பெரும் சக்தியாக சதாம் வளர்ந்து விடுவாரோ என சந்தேகம் எழுந்த போது ரசாயன உயிர் கொல்லி ஆயுதங்களை காரணங்கூறித் தான், ஒட்டுமொத்த ஈராக்கையும் இந்நிமிடம் வரை அமைதியில்லாமல் ஆக்கிவிட்டது ஆணவ வெறி பிடித்த அமெரிக்க அரசு. இந்த ஆயுதங்களை முன்பு ஈரானுக்கு எதிராக பயன்படுத்த சதாமுக்கு கொடுத்ததே அமெரிக்கா தான்.
இப்படி கண் முன்னே நடக்கும் கோரங்களைக் கண்ட பின்பும் வலிந்து போய் பலிகடா ஆக நினைக்கிறது இந்தியா.ஆக இந்த பிணம் தின்னும் கழுகு புஷ்-ன் இந்திய வருகை வருங்காலத்தில் இந்தியாவில் ரத்த ஆறு ஓடச் செய்வதே என்பதை தொலை நோக்கு கண்ணோட்டத்துடன் பார்த்தோமேயானால் புரிந்துக் கொள்ளலாம் .
தன் வேலை முடிந்த உடன் தன் வேலைக்கு பயன் பட்ட மாட்டை கொன்று விடுவது தான் அதிகார வெறி பிடித்த அமெரிக்காவின் உத்தி. இதனை கடந்த கால நிகழ்வுகளிலிருந்து நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். ரஷ்யாவுக்கு எதிராக பின் லாடனை வளர்த்தி விட்டு இன்று அவனை அழிக்க ஓடுவது, ஈரானுக்கு எதிராக சதாமை வளர்த்தி விட்டு இன்று அதனை அழித்தது என பெரிய லிஸ்டே போடலாம். அந்த வகையில் தான் மத்திய ஆசியாவில் ஓர் வல்லரசு கனவினை இந்தியாவிற்கு வழங்கி தன் எண்ணத்தை நிறைவேற்ற இந்தியாவை பகடை காயாக உபயோகிக்க முயல்கிறது. காரியம் முடிந்தால் நாளை இந்தியாவிற்கு எதிராகவும் இந்த வெறி பிசாசு திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.