பாலைவன பரங்கியன்

அரசியல்வாதிகள் குறித்த விமர்சனங்களுக்கான வலைப்பூ

Wednesday, March 08, 2006

விடுதலைப்புலிகளே கேளுங்கள்

அரசியல் சாக்கடை என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனாலும் அச்சாக்கடையில் விழுந்த பிறகு தனிமனிதனுக்கு இருக்கக் கூடிய தன்மான உணர்வு கூடவா மழுங்கி விடும்? ஆம் அப்படித்தான் என்று சாட்சி சொல்கிறார் மைக்-கு கிழிய சுய மரியாதைப் பற்றிப் பேசிய ‘கலிங்கப்பட்டி கரடி’ வை.கோ.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான விடுதலைப்புலிகளை ஆதரிப்பது போல பேசியதற்காகவே ஒராண்டுக்கும் மேலாக ‘கலி’ தின்ன வைத்த ஜெயலலிதாவிடமே கள்ள கூட்டு சேர்ந்துள்ள இந்த மானங்கெட்டவரை என்னவென்று சொல்வது. இவர் சிறையிலிருந்த காலங்களில் ஒவ்வொரு நாளையும் எண்ணி,எண்ணி 'பேனர்' வைத்தே கலைத்துப்போன தொண்டர்களின் உணர்வுகளை காலடியில் போட்டு மிதித்து விட்டு, வெட்கமில்லாமல் ஜெயலலிதாவுடன் குலாவுவதை உணர்வுள்ள எந்த தொண்டனும் மன்னிக்கவே மாட்டான்.

குமரி முதல் சென்னை வரை நடையாய் நடந்த நடைப்பயணத்தைத்தான் மறக்க முடியுமா? வழி முழுவதும் வலிக்காத கால்கள், சென்னையில் ஜெயலலிதா கொடுத்த தொல்லையால், இனிதாய் முடிக்க முடியாத போது வலித்திருக்குமே, அதைக்கூடவா மானங்கெட்டவர் மறந்து விட்டார்.

தமிழர் நலன், தமிழ்க்கலாச்சாரம், தமிழ் மொழிப் பற்று என்று சொல்லிக் கொண்டு, சராசரி மனிதனிடம் இருக்கக்கூடிய சுய மரியாதையைக்கூட இழந்து தழிழன் என்றுக்கூட அல்ல; சாதாரண மனிதன் என்று சொல்லக்கூட தகுதி இல்லாதவராகி விட்டார் இந்த கோபால்சாமி.

உள்ளூர் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து விட்டு, ஈழத்தமிழர்களாகிய உங்களின் பெயரால் ஈனத்தனமான அரசியல் நடத்தும் இந்த கழிச்சடைகளை விடுதலைப்புலிகளே;உங்கள் ‘பாணியில்’ நீங்களே கேளுங்கள்.

Tuesday, March 07, 2006

வந்தது புறா அல்ல கழுகு!

ஆசியப் பயணத்தின் முக்கிய பகுதியாக அமெரிக்காவின் தாதா, மனித சமூக விரோதி, பிணம் தின்னிக் கழுகு "புஷ்" இந்தியா வந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. பல்வேறு நாட்டின் அரசியல் தலைவர்கள் நம் நாட்டிற்கு வருவதும், நம் நாட்டின் அரசியல் தலைவர்கள் பல்வேறு நாட்டிற்கு போவதும் சகஜம்தான். ஆனால் யாரை வரவைப்பது யாருடன் நட்பு கொள்வது என்பதுதான் முக்கியமானது. ஏனெனில் இந்தியாவிற்கென்று தனி மதிப்பு உலக அரங்கில் உண்டு.

வந்தது ஏன்?

ஆசியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் உச்சியில் இருப்பது சீனா ஆகும். இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் இதன் வளர்ச்சி எங்கோ சென்றுவிடும். சீனாவின் பொருள்கள் ஏற்றுமதி செய்யாத எந்த நாடும் இல்லை என்று கூறுமளவுக்கு அந்த நாட்டின் பொருள்கள் உலக நாடுகள் அனைத்திலும் வியாபித்துள்ளன. இது அமெரிக்காவிற்குத் தலை வலியாகவே இருந்து வருகின்றது. உலக நாடுகளின் நாட்டாமை நான் தான் என கூறிக்கொண்டு இருக்கும் பொழுது இன்னொரு நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்து வருவதை இந்த இழிமதி கொண்டவர்களால் எப்படி சகிக்க முடியும். அதற்குத்தான் இந்த குள்ள நரிகளின் இந்தியா வருகை.

சமீபத்தில் அதாவது ஆப்கான் யுத்தம் நடக்கும் பொழுது அமெரிக்கா சீனாவின் மிலிடரிக்கு இரண்டு போர் விமானம் கொடுத்தது. அதில் மைக்ரோ போன்களை மறைத்து வைத்து கொடுத்தது. மிலிட்டரி கமாண்டர்கள் என்ன பேசுகின்றனர் என ஒட்டு கேட்பதற்காக. இதைக் கண்டுபிடித்துவிட்ட சீனா அரசாங்கம் அந்த இரண்டு விமானத்தையும் எரித்துவிட்டது.

சீனாவை நேரடியாக சீண்டாமல் முதுகில் குத்த தயாராகி விட்டது இந்த காட்டேறி. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட களம் தான் இந்தியா. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு, அணு சக்தி தொழில் நுட்பத்தை அமெரிக்காவிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு அனுமதி அளித்ததிலிருந்தே எவ்வளவு பெரிய “பயங்கர சதித்திட்டம்” அரங்கேற உள்ளது என்று புரிந்துக் கொள்ளலாம்.

இதைப் பற்றிய அறிவில்லாமல் நச்சுப்பாம்பு புஷ்-ன் வருகையை தலையில் வைத்து ஆடுகிறார்கள் இந்திய ஆளும் வர்க்கத்தினர். ஏற்கெனவே ஈரான்,ஈராக் போரில் சதாம் உசேனை வளர்த்து விட்ட அமெரிக்கா,அவர்களுக்கு எதிராக மத்திய ஆசியாவில் ஒரு பெரும் சக்தியாக சதாம் வளர்ந்து விடுவாரோ என சந்தேகம் எழுந்த போது ரசாயன உயிர் கொல்லி ஆயுதங்களை காரணங்கூறித் தான், ஒட்டுமொத்த ஈராக்கையும் இந்நிமிடம் வரை அமைதியில்லாமல் ஆக்கிவிட்டது ஆணவ வெறி பிடித்த அமெரிக்க அரசு. இந்த ஆயுதங்களை முன்பு ஈரானுக்கு எதிராக பயன்படுத்த சதாமுக்கு கொடுத்ததே அமெரிக்கா தான்.

இப்படி கண் முன்னே நடக்கும் கோரங்களைக் கண்ட பின்பும் வலிந்து போய் பலிகடா ஆக நினைக்கிறது இந்தியா.ஆக இந்த பிணம் தின்னும் கழுகு புஷ்-ன் இந்திய வருகை வருங்காலத்தில் இந்தியாவில் ரத்த ஆறு ஓடச் செய்வதே என்பதை தொலை நோக்கு கண்ணோட்டத்துடன் பார்த்தோமேயானால் புரிந்துக் கொள்ளலாம் .

தன் வேலை முடிந்த உடன் தன் வேலைக்கு பயன் பட்ட மாட்டை கொன்று விடுவது தான் அதிகார வெறி பிடித்த அமெரிக்காவின் உத்தி. இதனை கடந்த கால நிகழ்வுகளிலிருந்து நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். ரஷ்யாவுக்கு எதிராக பின் லாடனை வளர்த்தி விட்டு இன்று அவனை அழிக்க ஓடுவது, ஈரானுக்கு எதிராக சதாமை வளர்த்தி விட்டு இன்று அதனை அழித்தது என பெரிய லிஸ்டே போடலாம். அந்த வகையில் தான் மத்திய ஆசியாவில் ஓர் வல்லரசு கனவினை இந்தியாவிற்கு வழங்கி தன் எண்ணத்தை நிறைவேற்ற இந்தியாவை பகடை காயாக உபயோகிக்க முயல்கிறது. காரியம் முடிந்தால் நாளை இந்தியாவிற்கு எதிராகவும் இந்த வெறி பிசாசு திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

Sunday, March 05, 2006

இப்படியும் நடக்குது!

சின்ன வயசுல அப்பா,அம்மா விளையாட்டு,விளையாடினாலே தப்புன்னு சொல்லுவாங்க.ஆனா இங்கே பெத்தவங்களே தாலி எடுத்து கொடுத்து,கல்யாணம் நடத்தி அப்பா-அம்மா விளையாட்டு விளையாடச் சொல்றாங்க.அட உண்மையாதாங்க.

ஹைடெக் சிட்டி-யான ஹைதராபாத் அமைந்துள்ள ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், காளஹஸ்தி என்ற ஊரில் உள்ள காளத்தீஸ்வரர் கோயிலில், ஒவ்வொரு வருடமும் மஹா சிவராத்திரி விழாவை ஒரு வாரம் கொண்டாடுவார்களாம். இந்த விழாவின் ஹைலைட்டே அம்பாள் திருமணம் தான். அம்பாள் திருமணத்தின் போதே தங்கள் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்வதை புண்ணியமாக(?)க்கருதி சிறுவயது குழந்தைக்கு கூட திருமணம் செய்து வைக்கிறார்கள்.


எப்போதோ ஒழிக்கப்பட்டிருக்க வேண்டிய இத்திருமணங்கள் மதத்தின் பெயரால் தொடர்வது இளைய தலைமுறைக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும். பல்வேறு சமூக நல அமைப்புகளின் கண்டணத்தினால் மாநில அரசு இம்முறை இரண்டாயிரத்திற்கும் அதிகமான போலிசாரை பணியில் ஈடுபடுத்தி,கண்காணித்தார்களாம். என்ன கண்காணித்து என்ன பிரயோஜனம்,

பாருங்க ஜோரா கல்யாணம் முடிஞ்சி பொண்ணும்,மாப்பிள்ளையும். ரெடியா இருக்காங்க .


மதத்தின் பெயரால் நடக்கும் இக்குற்றங்களை தடுக்க வேண்டிய மடாதிபதிகளே, கொலையாதிபதிகளாக இருக்கும் இக்காலத்தில் பாவம் இப்படியும் நடக்குது போலீஸ் என்ன செய்யும்.